Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா : ராமேஸ்வரத்தில் கொடியேற்றம் ஆடித் திருக்கல்யாண விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் கடும் வறட்சி: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ. 40
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2013
10:08

வத்திராயிருப்பு: இன்னும் சில நாட்களில் ஆடி அமாவாசை விழா துவங்க உள்ள சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற இடங்களில் பெய்த சாதாரண மழைகூட, இம்மலைப்பகுதியில் பெய்யாததால், மலையில் உள்ள ஆற்றுப்படுகைகள், ஆகாயகங்கை ஊற்று, கிணறுகள் வறண்டு விட்டன. எப்போதும் வற்றாமல் இருக்கும், நாவல் ஊற்றும், இந்த ஆண்டின் வறட்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வற்றி விட்டது. கடந்த ஆனி மாதம் நடந்த அமாவாசை, பவுர்ணமி உட்பட விசேஷ நாட்களில் சென்ற பக்தர்கள், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி, மிகவும் சிரமத்திற்குள்ளாயினர். கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள, ஒரேயொரு கிணற்றில் மட்டும், சிறிது ஊற்று நீர் வருகிறது. 5 மணி நேரம் ஊறியபிறகு, அரைமணி நேரம் மோட்டாரை இயக்கி, தண்ணீர் எடுக்கப்பட்டது. அதையும் பக்தர்கள் வரிசையில் நின்ற பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இன்னும் சிலநாட்களில் ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. ஆக.,6 ல் நடக்க உள்ள இவ்விழாவிற்கு, ஆக., 2 ம் தேதி முதலே, பக்தர்கள் வரத்துவங்கி விடுவர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இத்திருவிழாவிற்கு, அவ்வளவு பேருக்கும் தேவையான தண்ணீருக்கு, கோயில் நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என, தெரியவில்லை. அறநிலையத்துறை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததால், திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கூறுகையில், "லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். வருமானம் குவிகிறது. ஆனால் கோயில் நிர்வாகம். பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. கழிப்பறை வசதிகள் இல்லாததால். மலைப்பாதையின் இருபுறமும் அசுத்தப்படுத்துகின்றனர். தற்போது பக்தர்கள் முகம் கழுவுவதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல், "மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி,""விழாவை கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே, மலையில் புதிதாக மூன்று இடங்களில் ஆழ்குழாய் கிணறு போடும் பணிகள் துவங்கி, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த இரு ஆழ்குழாய் கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. அன்னதான மடங்களில் உள்ள, ஆழ்குழாய் கிணறுகளிலிருந்தும் பக்தர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரச்னை இருக்காது. கடந்த சிலமாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட, புதிய கழிப்பறைக்கான கட்டுமானப் பணிகள், தண்ணீர் பற்றாக்குறையால் அரைகுறையாக நிற்கிறது. ஏற்கனவே உள்ள கழிப்பறைகளும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar