பதிவு செய்த நாள்
02
ஆக
2013
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, ஜூலை 30 ல், தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, கருடாழ்வார் முத்திரை பதிக்கப்பட்ட கொடி, ஏற்றப்பட்டது. இரவு 11:00 மணிக்கு, பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பவனி வந்தனர். சென்னையை சேர்ந்த, பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அழகர் முத்திரை பொறித்த டாலருடன் கூடிய, 20 பவுன் செயினை காணிக்கையாக செலுத்தினார்.