திண்டிவனம்:திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராதா கல்யாண மகோற்சவம் நடந்தது.திண்டிவனம் ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 19ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்வம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாக்கியலட்சுமி பார்த்தசாரதி தலைமை தாங்கினார். 2 நாள் நடந்த விழாவில், நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, 24 அஷ்டபதிகள் பாராயணம் செய்யபட்டது. மாலை கோலாட்டம், தீப பிரதக்ஷ்ணம், டோலோத்ஸவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை உஞ்சவிருத்தி, முத்துகுத்துதல், திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. சென்னை ஸ்ரீமதி பத்மா சீதாராமன், திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார். அமிர்தவர்ஷினி பஜன் மண்டலி சார்பில் பஜனையும், திருமண விருந்தும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் நிர்வாகிகள் செய்திருந்தனர்.