Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநியில் குளியல் கட்டணம் ரூ.30 மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்: இரண்டு லட்சம் பக்தர்கள் திரண்டனர் மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத் கோவில் கர்ப்பகிரக சுவரில் சேதம் : ஆய்வு செய்த தொல்பொருள் அதிகாரி தகவல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
10:08

புதுடில்லி : "கேதார்நாத் சிவன் கோவில் கர்ப்பகிரக கட்டடம், லேசான சேதம் அடைந்துள்ளது என, தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம், 16 மற்றும் 17ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்த பெருவெள்ளத்தில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கேதார்நாத் கோவில் பலத்த சேதமடைந்தது. கோவிலின் உட்புறம், இரண்டு நாட்களுக்கு முன் தான் சரி செய்யப்பட்டது; வெளிப்புறத்தை சரி செய்ய, இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கேதார்நாத் கோவிலை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வுத் துறையின், கூடுதல் இயக்குனர், பி.ஆர்.மணி நேற்று கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கிய கேதார்நாத் கோவிலின் ஸ்திரத்தன்மை குறித்து, இம்மாதம், 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆராய்ந்தோம். கோவிலின் கர்ப்பகிரகத்தின், வட கிழக்கு சுவரில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. கோவிலின் நுழைவாயில் மற்றும் வெளிப்புறங்களின் அனைத்து பகுதிகளிலும், பாறைகள் மோதியுள்ளதால், பாதிப்பு உள்ளது. எனினும், கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஸ்திரமாக உள்ளது. வரும் காலங்களிலும் நிலைத்து நிற்கும் என நம்புகிறோம். ஏனெனில், 11ம் நூற்றாண்டிலிருந்து, பல இயற்கை சீற்றங்களை, இந்த கோவில் எதிர்கொண்டுள்ளது. கோவிலின் உட்புறத்தில் இருந்த சிலைகள் காணாமல் போயினவா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது; ஏனெனில், கோவில் எங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. கோவிலின் பின்புறத்தில் உருண்டோடி வந்த, 10 அடி உயரம், 30 அடி அகலத்தில் உள்ள பாறை தான், வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து கோவில் கட்டடத்தை காப்பாற்றியது, என, பக்தர்கள் கூறுகின்றனர். அந்த பாறையை, "தெய்வப் பாறை என்கின்றனர். அதை அகற்ற வேண்டுமா என்பது, இந்திய புவியியல் கணக்கெடுப்பு துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவை பொறுத்தது. இவ்வாறு, அதிகாரி மணி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar