புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், நாளை (20ம் தேதி) ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 5:00 மணி முதல் 12:00வரை, 1மணி நேரத்திற்கு ஒவ்வொரு பிரிவாக பூணூல் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி காலை 5:00 மணி முதல் 7:00 வரை காயத்ரி ஜெபம் நடக்கிறது. ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள் சித்தானந்தா சுவாமி கோவிலில் நடக்கும் ஆவணி அவிட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான தகவலுக்கு 98423 29770, 98423 27791, 98423 829770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.