Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு! பெருமாள் கோயில் புதிய தேர் இறுதிகட்ட பணியில் தொய்வு பெருமாள் கோயில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

மத்தூர்: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த, தீமிதி திருவிழாவில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. 68ம் ஆண்டு தீமிதி திருவிழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருக்கல்யாணம்: தினமும், காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பள்ளிப்பட்டு பஞ்சாட்சரத்தின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.13ம் தேதி உற்சவர் திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 14ம் தேதி சுபத்திரைக் கல்யாணம் நடந்தது. 16ம் தேதி அர்ஜுனன் தபசும், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். பட்டாபிஷேகம்இதில், மத்தூர், மூலமத்தூர், கொத்தூர், புச்சிரெட்டிப் பள்ளி உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு, 7:30 மணிக்கு வாண வேடிக்கையுடன் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘தர்மத்தின் வழியில் கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம்,’’ என, மதுரையில் தினமலர் நாளிதழ் இணை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar