சோழவந்தான்: தென்கரை அக்ரஹார சத்யபாமா, ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில், கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு, தேவியர்களுடன் சுவாமி கிருஷ்ணன் ஆடிவீதியில் எழுந்தருளினார். பின், பட்டர் பாலாஜி குழுவினர் வேதம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.