Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நான் திருடர் தலைவன் ஆவேசப்பட்ட ... கம்பரின் பணிவு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
12:09

*மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல்நலத்தைக் காக்கும். பொறாமை, கோபம், வஞ்சக எண்ணம், கவலை ஆகியவை காந்தசக்தியை அளவுக்கு மீறி அழித்துவிடும். தீய ஆசைகள் எழாவண்ணம் வேலி அமைத்துக் கொள்ளுங்கள்.
*வாரத்திற்கு ஒருமுறை இரவில் உணவு உண்ணாமல், லேசான உணவான பழவகைகளும், கொஞ்சம் பாலும் அருந்தி விட்டு உறங்கச் செல்லுங்கள். இதனால், வயிறு தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
*ஜீரணிக்கும் அளவுக்கு மட்டுமே உண்ணுங்கள். நோய்களை போக்கும் சக்தி இயற்கையாகவே உடலிற்கு உள்ளது. உணவு உண்டதும் கடினமான வேலை, ஓய்வு ஆகியவற்றைத் தவிருங்கள். இதனால், வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்புண்டு.
*கழிவாக வெளியேறும் எந்தப் பொருளும் உடல்மீது தங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால், அவை கிருமியாகும் அபாயம் இருக்கிறது. எனவே உடலை சுத்தமாக வைத்திருக்கவும்.
*அதிகாலையிலேயே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுங்கள். வாழ்வில் உயர்வதற்கு இவை மிகவும் துணைநிற்கும்.
*நிலா ஒளியின் ஏற்றத்தாழ்வுகள் உயிர்களின் உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அறிவைத் தீட்டும் வகையில் பயிற்சி கொடுப்பதும், உணவில் ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதும் அவசியம். புனிதமான இந்நாட்களில் விரதமிருப்பது மிகவும் நல்லது.
*சுயநல மனப்பான்மை கொண்டவன் தற்பெருமை கொண்டிருப்பான். எல்லாம் கடவுள்மயம் என்று உணர்ந்தவனோ, அகந்தையை விட்டு விடுவான்.
*ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்குடும்பம், உறவினர், நாடு, உலக சமுதாயம் ஆகிய ஐந்துவகையிலும் கடமைகள் இருக்கின்றன. தேடும் செல்வத்தை இந்த வழிகளில் முறையாக செலவழிக்க வேண்டியது அவசியம்.
*அதிகமான பணம் தனி ஒரு நபரிடம் சேரும்போது, பண்புநலன் கெட வழி உண்டாகும். இதனால் சமூகத்திற்கும் பிரச்னை ஏற்படும். அளவுக்கு அதிகமான செல்வத்தை சமூகநலனுக்கு செலவிட்டால் மனஅமைதியும், நிறைவும் உண்டாகும்.
*போதும் என்ற மனமும், செல்வத்தை அளவாகத் தேடுதலும், தன் தேவை போக பிறருக்கு உதவுவதும் செல்வத்தை சரியாக நிர்வகிக்கும் வழியாகும்.
*இன்றைய சமுதாயத்தில் மனித உறவுகளை விட்டு விலகுவதும், பொருட்களின் கவர்ச்சியில் இருந்து தப்பி ஓடுவதும் முடியாத காரியம். அது கோழைத்தனமானதும் கூட. உலகம் எப்படி இருந்தாலும், கடமையை முறையாகச் செய்து கொண்டிருப்பது ஒன்றே சரியான வழி.
*நாம் பிறரை வாழ்த்தும் போது அன்பு மயமாகி விடுகிறோம். முழுமனதுடன் அன்பு கனிந்து வாழ்த்தினால், அதைப் பெறுபவர் மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்து அலை சென்றடைகிறது. இதனால், உலகமே நன்மை பெறுகிறது.
*மலர்ச்செடி, எல்லாருக்கும் மணத்தைப் பரப்புகிறது. அதுபோல, நல்ல மனநலமும், உடல்நலமும் உள்ளவர்களால் எல்லாரும் பயனடைகிறார்கள்.
-வேதாத்ரி மகரிஷி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar