Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்வார்குறிச்சி வெங்கடேச பெருமாள் ... பாரம்பரிய ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட்டம் பாரம்பரிய ஓணம் பண்டிகை விமரிசையாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய பல்லக்கு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2013
10:09

திருப்பதி:திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய பல்லக்கை, தேவஸ்தானம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம், 5ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குவதையொட்டி, ஏழுமலையானின் வாகனங்களை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி ஆய்வு செய்து, செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாள் நடைபெறும் மோகினி அலங்காரம் மற்றும் பத்மாவதி பரிணய உற்சவத்திற்காக, ஏழுமலையானுக்கு, "ரோஸ் வுட்டில் புதிய பல்லக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பல்லக்கை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, ஆய்வு செய்த பின், அனைத்து வாகனங்களும் வைக்கப்பட்டுள்ள, வைபவ மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறப்பு கண்காட்சி : திருமலையில், ஏழுமலையான் அருங்காட்சியகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த, ஆமதாபாத்தில் உள்ள, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்) நிபுணர்கள் குழு, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தனர். நேற்று, இவர்களுக்கு, ஏழுமலையானின் வரலாறு, சிறப்புகள், ஆபரணங்கள், நாணயங்கள், காலத்திற்கேற்ப திருமலையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள், அன்னமாச்சார்யாவின் தாமிர ஏடுகள் குறித்து, தேவஸ்தான உயர் அதிகாரிகள், தலைமை தீட்சிதர், ரமண தீட்சிதர் உள்ளிட்டோர் விளக்கிக் கூறினர். இவற்றின் அடிப்படையில், ஒரு கருத்தை மையமாகக் கொண்டு, கண்காட்சி அமைப்பதற்காக, அனைத்து விவரங்களையும், தேவஸ்தானத்திடம் நிபுணர் குழு கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், கண்காட்சி அமைக்கும் பணியில் நிபுணர் குழுவினர் ஈடுபட உள்ளனர். வரும் பிரம்மோற்சவத்திற்குள், இப்பணி முடிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar