கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பால், சந்தனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், பவுர்ணமி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.