பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
பொதட்டூர் பேட்டை: பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், பூவராக சுவாமிக்கு, நேற்று, திருக்கல்யாண வைபோவம் நடந்தது. பொதட்டூர் பேட்டை அடுத்த, மேல்பொதட்டூரில், பூவராக சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த, 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று, காலை 10:00 மணிக்கு, திருக்கல்யாண வைபோவம் நடந்தது. மூலவர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், உற்சவர் பூவராக சுவாமி, அம்பாளுடன், புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தர். இன்று காலை, 10:00 மணிக்கு, சக்ரஸ்தானம் நிகழ்ச்சியும், மாலை, பிரம்மோற்சவ நிறைவு விழாவும் நடைபெற உள்ளது.