திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சுப்ரபாதமும், 8 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், 9:30 மணிக்கு காசியாத்திரையும், 10:30 மணிக்கு மாங்கல்யதாரணமும் நடந்தது. அதன் பின் திவ்யதேச பெருமாள் ஆண்டாள் மாலை மரியாதைகள் வாரணமாயிரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.