Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிரம்பும் நிலையில் இடுக்கி அணை : ... பேரூரில் நாட்டியாஞ்சலி துவக்கம்! பேரூரில் நாட்டியாஞ்சலி துவக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தங்கத்தேர் சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 செப்
2013
10:09

திருப்பதி: திருமலையில் புதிய தங்கத்தேரின் சோதனை ஓட்டம், வரும், 31ம் தேதி நடைபெற உள்ளதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜு, நேற்று இரவு தெரிவித்தார். திருமலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள, பிரம்மோத்சவ விழாவில், வலம் வருவதற்கு, புதிய தங்கத்தேரை, தேவஸ்தானம், 25 கோடி செலவில், செய்து வருகிறது. பழைய தங்கத்தேர் பழுதடைந்துள்ளதால், வெள்ளித்தேரின், மரக்கட்டையைக் கொண்டு, புதிய தங்கத்தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 24 டன் மரக்கட்டையும், 3 டன் செப்புத் தகடுகளும், 74 கிலோ சுத்த தங்கமும், பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை, தங்கத்தேருக்கு, புதியதாக ஹைட்ராலிக் பிரேக் போடப்பட்டுள்ளது. இதனால், தேரை, வளைவுகளில் திருப்புவதற்கும், நிறுத்துவதற்கும், மிகவும் வசதியாக இருக்கும். இதன் பணிகள் விரைவாக, செய்து முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம், வரும் 31ம் தேதி, நடைபெறும். சோதனை ஓட்டத்திற்கு பின் தங்கத்தேர், முழு பாதுகாப்புடன், அதற்கென ஏற்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
திருப்பதி பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம்:
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: ஏழுமலையானை தரிசிக்க, 50, 300 ரூபாய் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வாங்கி வருவோருக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. பாதயாத்திரை மற்றும் தர்ம தரிசன பக்தர்களுக்கு, 20 ரூபாய் விலையில், லட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனுக்கு ஒரு லட்டு கிடைக்கும். ஏழுமலையானை தரிசிக்க, தினசரி, 70 ஆயிரம் பேர் வருகின்றனர். அவர்களில், 40 ஆயிரம் பேர், பாதயாத்திரை மற்றும் தர்ம தரிசனத்திற்கு வருகின்றனர். இப்படி வரும், ஏழை பக்தர்களுக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கலாம் என, கோரிக்கை எழுந்தது. ஒருவருக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கினால், ஒரு நாளைக்கு, 8 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால், தேவஸ்தானத்திற்கு எந்த இழப்பும் வராது. எனவே, இந்த வாரம் நடைபெறவுள்ள, அறங்காவலர் குழுக் கூட்டத்தில், அனுமதி பெற்று, லட்டுப் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். இரண்டு லட்டுகளுக்கு அனுமதி கிடைக்காவிடில், 1 லட்டாவது இலவசமாக வழங்க அனுமதி பெறப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar