பதிவு செய்த நாள்
23
செப்
2013
10:09
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில், 3,000 ஆண்டுகள் பழமையான, முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவரது நிலத்தில், மீன்வளர்ப்பு திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, பழமை வாய்ந்த, 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்தன. சமூக ஆர்வலர் ராமமூர்த்தி, பண்ருட்டி தொல்பொருள் ஆய்வாளர் தமிழரசனுக்கு தகவல் தெரிவித்தார். தாழியை ஆய்வுசெய்த தமிழரசன் கூறியதாவது:பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில்,2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கிடைத்து வருகின்றன.தற்போது கிடைத்துள்ள தாழிகள்,3,000ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. இப்பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மக்கள் வசித்து வந்ததாக அறிய முடிகிறது. இந்த தாழிகள், மேல் விளிம்புகளுடன் கூடிய மூடிகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.