பதிவு செய்த நாள்
23
செப்
2013
10:09
கீழக்கரை: தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு, மூன்று ஆயிரத்து 739 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். சென்னையில் இருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை செப்., 24ல் புறப்படுகிறது, என, மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர் ராவியத்துல் கதரியா தெரிவித்தார். அவர் கூறியதாவது; ஹஜ் கமிட்டிக்கு 10 ஆயிரத்து 490 பேர் விண்ணப்பித்துள்ளனர். குலுக்கல் முறையில் இரண்டு ஆயிரத்து 701 பேரும், வழிமுறை கையேட்டின்படி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 380 பேர், 4வது முறை விண்ணப்பித்த 556 பேர், இந்திய ஹஜ் குழு சார்பில் வழங்கப்பட்ட இருக்கை 102 பேர் என மொத்தம் 3,739 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு, முதல் விமானம், செப்., 24ல் புறப்படுகிறது. தொடர்ந்து 3ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படும். ஒவ்வொரு ஹஜ் விமானத்திலும், 420 பேர் பயணம் செய்ய உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.