பதிவு செய்த நாள்
23
செப்
2013
10:09
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் உற்சவம் நடந்தது. இக்கோயிலில், தேவியருடன் பெருமாள் சுவாமிக்கு, பல்வேறு அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதல், தீபாராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு புஷ்பாங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார். புரட்டாசி மாதத்தையொட்டி, தினமும் கோயில் நடை, காலை 6 முதல் 12 மணி, மாலை 4 முதல் 9 மணி வரை, சனிக்கிழமை தோறும் காலை 5.30 முதல் 1 மணி, மாலை 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி ராஜேந்திகுமார் , ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்துள்ளனர். குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் நடை, காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 6 மணி வரை, சனிக்கிழமை காலை 5.30 முதல் 1 மணி வரை , மதியம் 3 முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். சனிதோறும்காலை 10 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள், வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சுமதி, ஆலய ஊழியர் வெங்கடேசன் செய்தனர்.