புதுச்சேரி : கென்னடி கார்டன் வெக்காளியம்மன், அங்காள பரமேஸ்வரி கோவிலில், நவராத்திரி விழா அக் 5ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி கென்னடி கார்டனில் வெக்காளியம்மன், அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா அக் 5ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலிருந்து கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு வீதியுலா, 7:30 மணிக்கு கும்பம் கொட்டுதலும் நடக்கிறது.