Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன்னர் கோட்டையில் தங்க புதையலா ? ... கார்த்திகைக்கு 10 லட்சம் விளக்குகள் தயாரிப்பு கார்த்திகைக்கு 10 லட்சம் விளக்குகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மஹாரதத்துக்குரூ. 8 லட்சத்தில் பைபர் கூண்டு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 அக்
2013
10:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா ரதம், 8 லட்ச ரூபாய் மதிப்பில் பைபர் கண்ணாடி கூண்டு அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய விழா கார்த்திகை தீப திருவிழா. இந்த விழாவில், பத்து நாட்கள் பஞ்சமூர்த்திகள் ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இதில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருவர்.ஏழாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, 63 அடி உயரமுள்ள மஹாரதத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வீதி உலா வந்து அருள் பாலிப்பார்.தீபத்திருவிழா முடிந்ததும் இந்த தேர்களை தேரடி வீதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும். அப்போது மழை, வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க இரும்பு தகரத்தால் மூடி வைப்பர்.மற்ற நாட்களில் தேரின் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில் மஹாரதத்தை ஆண்டு முழுவதும் பக்தர்கள் காணும் வகையில், 8 லட்ச ரூபாய் மதிப்பில் பைபர் கண்ணாடியால் செய்யப்பட்ட கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேரை சுற்றிலும் பாதுகாப்பு கவசம் போல் அமைப்பதால் தேருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, தேரின் பொலிவும், உறுதி தன்மையும் குறையாது. இந்த முயற்சியை தொடர்ந்து மற்ற தேர்களுக்கும் பைபர் கண்ணாடி பாதுகாப்பு கவசம் அணிவிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar