அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 5ம் சனிக்கிழமை படையல் வழிபாடு நடந்தது. அவலூர்பேட்டையில் 5ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆதி கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு தளு, படையல் வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்றிரவு ஆதிகேசவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி ரங்கநாதன், துணை தலைவர் கோமதி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.