பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2013 10:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. 8 மணிக்கு சிறப்பு அலங்காரத் தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை ராஜா குருக்கள் செய்திருந்தார்.