Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை ... அக்னீஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் ஜெயந்தி விழா: உளுந்தூர்பேட்டையில் ரத உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2013
10:10

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவையொட்டி 27ம் தேதி சிறப்பு ரத உற்சவம் நடக்கிறது. சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு ரத உற்சவம் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டை வரும் ரதத்திற்கு சாரதா ஆசிரமம் சார்பில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை பகுதிகளிலுள்ள 150 கிராமங்களுக்கும் சாரதா ஆசிரமம் சார்பில் 9 ரத உற்சவம் உலா வருகிறது. ஊட்டி ராமகிருஷ்ண மடம் தலைவர் ராகவேஷானந்தஜி மகராஜ் துவக்கி வைக்கிறார். குமரகுரு எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் மாலை அணிவிக்கின்றனர். அன்று காலை 11 மணிக்கு ஆசிரம வளாகத்தில் சென்னை தர்ம ரஷண சமிதி மாநில செயலாளர் கிருஷ்ண ஜெகந்நாதன் சிறப்புரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம யதுநாதானந்தஜி மகராஜ் ரதத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். மதியம் 2.45 மணிக்கு யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா அறிமுகவுரையாற்றுகிறார். ராகவேஷானந்தஜி மகராஜ், அனந்தானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்குகின்றனர். இறையன்பு ஐ.ஏ.எஸ்., யதுநாதானந்தஜி மகாராஜ், யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா, எஸ்.பி., மனோகரன் பேசுகின்றனர். அபிராமானந்தஜி மகாராஜ் தலைமையுரையாற்றுகிறார். 28ம் தேதி உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களில் ரத உற்சவம் நடக்கிறது.

மாவட்டத்தில் ரத உற்சவம்: மாவட்டத்தில் வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டை, 28ம் தேதி உளுந்தூர்பேட்டை கிராமங்கள், 29ம் தேதி திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர், 30,31ம் தேதிகளில் விழுப்புரம், 3ம் தேதி திண்டிவனம், 4ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 5ம் தேதி கச்சிராயப்பாளையம் பகுதி வழியாக ஆத்தூர் கணையனூர் பகுதிககு ரத உற்சவம் செல்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar