Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிவாடி மவுனகுருசுவாமி கோயில் ... சித்தி விநாயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்! சித்தி விநாயர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசல்: மீனாட்சி கோயில் நடைசாத்தாமல் தரிசனம்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2013
10:11

மதுரை: மதுரையில், ஐயப்ப சீசன் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, மீனாட்சி கோயில் நடை சாத்தாமல் நாள் முழுவதும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்து உள்ளனர். ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதியின்போது, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகின்றனர். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்களில் வருவதால், நெரிசலால் நகரே ஸ்தம்பிக்கிறது. எல்லீஸ்நகர், தெற்குமாரட்வீதி, மாட்டுத்தாவணி, பைபாஸ் ரோடு போன்ற இடங்களில் "பார்க்கிங் வசதி செய்து கொடுத்தும், போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், மீனாட்சி கோயிலில் நடை சாத்தப்படும் நேரத்தில் ஐயப்ப பக்தர்கள் வருவதே நெரிசலுக்கு காரணம் என தெரியவந்தது. காலை 11.30 மணிக்கு, மதுரைக்கு வரும் பக்தர்கள், நடந்தோ, ஆட்டோவிலோ கோயிலுக்கு செல்ல மதியம் 12.30 மணி ஆகிவிடுகிறது. அப்போது நடைசாத்தப்பட்டு விடும். மாலை 4 மணிக்கு நடை திறக்கும்வரை, கோயில் பகுதியிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில், கூடுதல் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் மதுரை வருவதாலும், ஏற்கனவே காத்திருக்கும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நாள் முழுவதும் அம்மனை தரிசிக்கும் வகையில், நடைசாத்தப்படாமல் கோயிலை திறக்குமாறு, அதன் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இதை கோயில் நிர்வாகம் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ""இக்கோயில் நடைமுறைகள் அனைத்தும் சிவஆகம விதிப்படி நடக்கிறது. நடைசாத்தப்படும் நேரம் பூதகணங்களுக்குரியது என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே, போலீஸ் பரிந்துரையை ஏற்கவில்லை, என்றனர்.

மறுப்பு: மீனாட்சி கோயிலில், மத்திய உளவுத்துறை அறிவுரைபடி பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடை சாத்தப்பட்ட பின், கோயிலின் ஆடிவீதிகளில் கூட பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், சித்திரை வீதிகளில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, நடைசாத்தப்பட்ட நேரத்தில் ஆடிவீதிகளில் பக்தர்களை அனுமதித்தால், கோயில் கடைகளில் அவர்கள் "ஷாப்பிங் செய்ய முடியும்; ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றிபார்க்க முடியும் என போலீசிற்கு கோயில் நிர்வாகம் பரிந்துரைத்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை போலீஸ் ஏற்க மறுத்துவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar