Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
11:11

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் கொங்கணகிரி கந்த சுப்ரமணிய சுவாமி கோவில்களில் நேற்று சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி இரவு துவங்கியது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து, முருகனை வழிபட்டு வந்தனர். ஆறாவது நாளான நேற்று, சூரசம்ஹாரம் நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்ரமணியர் சன்னதியில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. கொங்கணகிரி கந்த சுப்ரமணிய சுவாமி கோவிலிலும், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலிலும், உற்சவர் மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பூஜை செய்து, அன்னையிடம் பெற்ற சக்திவேலுடன், சுப்ரமணியர் மயில் வாகனத்தில் போருக்கு புறப்பட்டார். வீரபாகு முன்னே செல்ல, மயில் வாகனத்தில் சென்ற சுப்ரமணியர், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன், பக்தர்கள் சக்திவேலுடன் பாய்ந்து சூரனின் தலையை கொய்தனர். போர் புரிந்து திரும்பிய, சுப்ரமணிய உற்சவருக்கு, அபிஷேக பூஜைகள் செய்து குளிர்விக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்ரமணியர், மயில் வாகனத்தில், சேவல் கொடி மற்றும் சக்தி வேலுடன் அருள்பாலித்தார். இன்று, சுப்ரமணியருக்கு திருக்கல்யாணமும், பட்டி விநாயகரை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை 11.00 மணிக்கு சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. நேற்று, சஷ்டியை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், வேத பாராயணம், அலங்கார பூஜை ஆகியன நடந்தன. மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருமுருகன்பூண்டியில் திரண்ட பக்தர்களுக்கு மத்தியில், கஜமுகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன் மற்றும் பத்மாசூரன் ஆகிய சூரன்களை வேல் கொண்டு வதம் செய்தார். நான்கு ரத வீதிகளில் திரண்ட பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, சுவாமியை வழிபட்டனர். இன்று காலை 11.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar