திட்டக்குடி: ராமநத்தம் செல்வ வினாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 5ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், தனபூஜை, ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம் முதல் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதியும் 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது.