பதிவு செய்த நாள்
11
நவ
2013
12:11
*சிந்தை கலங்காதவர்கள், மனம் குழப்பமடையாதவர்கள்,பாவ புண்ணியம் பற்றி சிந்திக்காதர்களுக்கு அச்சம் என்பது அணுவளவும் இல்லை.
*தவறான கொள்கைகளைத் தழுவி, தீய பாதையில்செல்பவர்களே அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியதற்குஅஞ்சாதவராயும் இருப்பர்.
*உடல், நாக்கு, மனம் ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள அறிவாளிகளே உண்மையான நல்ல அடக்கம் உடைவர்கள்.
*அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.
*இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பை அழிப்பதுபோல், அறநெறியில் தவறியவனை அவனது செயல்களை அழித்துவிடும்.
*அதிகமாகப் பேசுவதால் மட்டும் ஒரு அறிஞனாகிவிட மாட்டான்.
*அறியாமையுடன் தன்னடக்கமில்லாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன், தன் நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
*கொடிய நஞ்சைப் போன்ற ஆசை எவரைப் பிடித்துக் கொள்கிறதோ, அவருக்கு காட்டுப் புல்லைப்போல துக்கம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
*தூய்மையான எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவரது நிழல் போல மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்கிறது. அதேபோல் தீய எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும்,செயல்புரிந்தாலும், மாட்டின் காலைப்பின்பற்றும் வண்டிச்சக்கரம் போல, துக்கம் அவனைப் பின்பற்றிச்செல்கிறது.
*சோம்பேறிகள் வெறும் பேச்சே பேசுகிறார்கள். சுதந்திர உலகில் வாழ்வது போல் கனவு கண்டு கொண்டு, சுதந்திரம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள். அவர்களால் ஒருபோதும் அறிவு வழியைக் காண முடியாது.
*மலரின் வண்ணத்துக்கோ, நறுமணத்துக்கோ குறை நேராமல் வண்டு தேனைச் சேகரிக்கிறது. அதுபோல், பிறரைப்புண்படுத்தாமல் நல்லதை எடுத்துரைக்க வேண்டும்.
*முட்டாளின் தோழமையைவிட, ஒருவன் தனிமையில் வாழ்வது எவ்வளவோமேலானது.
*என் உடல் நோய்பிடித்திருந்தாலும் என் மனம் நோய் பிடித்ததாக இருக்கக்கூடாது என்று நீங்களே உங்களை பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.
*எந்தக் காலத்திலும்பகைமையை வெல்லக்கூடிய ஆயுதம் அன்பு ஒன்றே.
*சேற்றில் விழுந்தயானையைத் தூக்கிவிடுவதுபோல், உங்கள்மனத்தைத் தீயவழியிலிருந்து நீங்கள்மீட்டுக் கொள்ளுங்கள்.
*உங்கள் நல்ல எண்ணங்களைசோர்வடையாமல் கட்டிக்காத்துக்கொள்ளுங்கள்.
*புயலுக்கும்அசையாதபாறையைப் போல,அறிவாளி புகழுக்கும் இகழ்ச்சிக்கும்அசைந்துகொடுப்பதுஇல்லை.
*தவறானவழியில்செல்லும்மனமே, விரோதியைக்காட்டிலும் பெரும் தீமையைச் செய்யும். அது நமக்குள் இருந்து கொண்டேநன்மையைத் தராது.
*கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும்,கருமியை ஈகையாலும், பொய்யனை உண்மையாலும் வெல்ல வேண்டும்.
*தன்னைத்தானே வெற்றி கொள்பவனே, போரில்ஆயிரம் பேரை அழித்து வெற்றிபெற்றவனை விட சிறந்தவன்.
-புத்தர்