பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவில், நான்காம் நாளான நேற்று, வெள்ளி கற்பக விருஷ வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, காலையில் நடந்த ஸ்வாமி திருவீதி உலாவில், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் நாக வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இரவு, 10 மணிக்கு மேல் நடைபெற்ற பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேத முருகர் வெள்ளிமயில் வாகனத்திலும், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் கற்பக விருஷ வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.