Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பசுவந்தனையில் திருக்கல்யாண விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒச அண பண்டிகை: பாரம்பரியம் மாறாமல் கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
10:11

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில், "ஒச அண மற்றும் "சூஞ்சு பண்டிகை கொண்டாடப்பட்டது.ஊட்டி அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில் படகரின மக்களின் பாரம்பரிய விழா நேற்று கொண்டாடப்பட்டது.விழா குறித்து, சுவாரஸ்யமான தகவல்: கடந்த 300 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில், அரசின் பிரதிநிதியாக, நீலகிரியில் இருந்து கப்பம் (வரி) வசூலித்து வந்தவர் சிக்கணதொரை. அவர் தூதூரில் வசித்த பாலசெவனன் என்பவருக்கு "மணியகாரர் பட்டம் கொடுத்து, மக்களிடம் வரி வசூலிக்க ஏற்பாடு செய்து, மணியகாரருக்கு அடையாள சின்னமாக ஒரு வெள்ளி முத்திரை வழங்கியுள்ளார். அந்த முத்திரை, இன்று வரை பாலகொலாவில் ஆண்டுதோறும் நடக்கும் "ஒச அண பண்டிகையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தவிர, கோவில் பூஜைகளுக்கு உதவியாக ஒருவரை நியமித்து, அவருக்கு 3 தங்க குண்டுமணிகளை வழங்கியுள்ளனர். அத்துடன் மேலூரில் பொதுவான சிவன் கோவில் அமைத்து, ஒரு பூசாரியையும் நியமித்துள்ளனர். ஆண்டு தோறும், படகரின மக்களின் முதல் மாதமாக கருதப்படும், "தை மாதத்தில் பாலகொலா பெந்தோரணை பகுதியில், சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த விழாவில், "குண்டுமணி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின், ஆண்கள் அனைவரும் காணிக்கை செலுத்தினர்; இந்த காணிக்கை, பூமிக்கு செலுத்தும் இந்தாண்டிற்கான புதுப்பணம் (கந்தாயம்) என கூறப்படுகிறது. மக்கள், கால்நடைகளை தீய சக்தி, கொடிய நோய், பில்லி சூனியம், பேய் பிசாசுகள் தொல்லை ஏற்படக்கூடாது என்பதற்காக, நேற்று, மேலூர், தங்காட்டில் உள்ள மகாலிங்கா கோவிலில் தீ மூட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், முன்னாள் கூடுதல் தலைமை செயலர் சுந்தரதேவன் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படகரின மக்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar