பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
நகரி: புத்தூர் அடுத்து உள்ள நாராயணவனம் வெங்கடேச பெருமாள் கோவிலில், ஐந்து நாள் தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. சித்தூர் மாவட்டம், புத்தூர் அடுத்துள்ள நாராயணவனம் கிராமத்தில், திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் தெப்ப உற்சவ விழா, நேற்று துவங்கியது. தெப்ப உற்சவ தொடக்க நாளான நேற்று, மாலை, 6:00 மணிக்கு, சீதா, லட்சுமண சமேத ராமச்சந்திர சுவாமி, தெப்பகுளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, (14ம் தேதி) ஆண்டாள் தாயார், குளத்தில் எழுந்தருளுகிறார். நாளை, 15 மற்றும் 16, 17 ஆகிய மூன்று நாட்களிலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான கல்யாண வெங்கடேச பெருமாள், தினமும் மாலை, 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, தெப்பத்தில் வலம் வருகிறார்.