திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம், மகா தீபத் திருவிழாவுக்கான டிக்கெட் விற்பனை, இன்று (நவ.15ல்) நடைபெறுகிறது. டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500. காலை 10.30 மணி முதல் 11 மணி வரை கோயில் அலுவலகத்தில் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். கோயில் பரணி தீபம், மகா தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் உள்ளிட்ட அனைத்து வகை பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.