Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடைமுக தீர்த்தவாரி விழா: காவிரியில் ... அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நினைவு நாள்! அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நினைவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 நவ
2013
10:11

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், 2,668 அடி உயரமுள்ள மலை மீது, நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை, 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில், மகா தீபம் ஏற்றும் பெருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை, 4:00 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என, பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் உள்ள, அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. நேற்று மாலை, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர், தங்கக்கொடி மரத்தின் முன் உள்ள, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சரியாக, 5:59 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர், தங்கக்கொடி மரம் முன், எழுந்தருளி நடனமாடினார். 6:00 மணிக்கு, பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில், தங்கக் கொடி மரத்தின் அருகே, ஐந்து தீ பந்தகள் ஏற்றப்பட்டு, அவை, 2,688 அடி உயரமுள்ள மலை மீது உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பிக்கப்பட்டது. அப்போது, இறைவன் ஒளிவடிவாக நிற்பவன் என்பதை குறிக்கும் வகையில், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை, 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நமது நிருபர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar