கடைமுக தீர்த்தவாரி விழா: காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 05:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நேற்று நடந்த கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு கா விரி துலா கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி சாபவிமோசனம் பெற மயி ல் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. இங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீ ர்த்தத்தில் மூழ்கி சிவ லிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதை கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த õள். மயில் உரு நீங்கி தேவி சுய உருப்பெற்றாள். சிவ மயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான்மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவு ரி மாயூரம் என்ற பெயர் இவ்ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் எ ன்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத் தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டி னாள் என்பது ஐதீகம்.
இதனை நினைவுக்கூறும் வகையில் வருடம் தோறும் ஐப்பசி மாதத்தில் திரு வாவடுதுறைஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலி ல் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந் தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரி நிக ழ்ச்சி நடந்தது. அதனையடுத்து ஐப்பசி கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவாக 13ம் தே தி திருக்கல்யாண உற்சவம், 16ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று க டைமுக தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி, அறம்வள ர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வாதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்ச மூர் த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் மதியம் 1 மணிக்கு காவேரி துலாக்கட்டத் தில் எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியார்கள் அஸ்திரதேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய் ய மதியம் 1.25 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி தீர்த்தம் ö காடுத்த போது காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை சுப்பிரமணிய தம்பிரா ன் சுவாமிகள், நகர் மன்ற தலைவர் பவானி, நீதிபதி தங்கமணி கணேசன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடைமுக தீர்த்தவாரியையொட்டி மயிலாடுதுறை ஏ.எஸ்.பி. சந்தோஷ் ஹடி மணி தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியி ல் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து இன்று 17ம் தேதி முடவன் முழுக்கு நடைபெறுகிறது.