திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. தெத்துப்பிள்ளையார் கோவிலில் மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.