Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் ஜெயேந்திரர் சாமி ... புத்தகாயாவில் துறவிகள் சிறப்பு வழிபாடு! புத்தகாயாவில் துறவிகள் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 கோவில்களில் அன்னதானத்திற்கு ஏற்பாடு: அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 நவ
2013
10:11

கடலூர்: கடலூர் மாவட்டத்தில், மேலும், மூன்று கோவில்களில், அன்னதானத் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 38 ஆயிரத்து 529 கோவில்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில், 1,458 கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்காக, தமிழக முதல்வர் ஜெ., உத்தரவின் பேரில், ஏற்கனவே துவங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. அன்னதானத் திட்டத்திற்காக கோவில் வளாகத்தில், தனியே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மதியம் ஒரு வேளை மட்டுமே பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும். கூடுதல் உண்டியல் வருமானம் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள கோவில்களில் மட்டுமே அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கடலூர் பாடலீஸ்வரர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர், வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், வைத்தியநாத சுவாமி, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி உட்பட 16 கோவில்களில் இந்த திட்டம் உள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில் உள்ள, மேலும், சில கோவில்களில் இத்திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் ஏற்கனவே 16 கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. திருவதிகை சரநாராயண பெருமாள், காடாம்புலியூர் அடுத்த கொஞ்சிக்குப்பம் அய்யனார், நெய்வேலி வட்டம், 13ல் உள்ள விஜயகணபதி வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட மூன்று கோவில்களில் இத்திட்டத்தை துவங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இத்திட்டம் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar