பதிவு செய்த நாள்
29
நவ
2013
11:11
சபரிமலை: அப்பம், அரவணை மற்றும் நெய்யபிஷேக டிக்கெட்டுகள், தனலட்சுமி வங்கி கிளைகளில் வினியோகம் துவங்கியது.சபரிமலை பயணத்தில் பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் கொண்டு வரும் நெய், அபிஷேகம் செய்ய, 10 ரூபாய் கட்டணம். இதற்கான டிக்கெட்டுகள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு டிக்கெட் கவுன்டர்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்த சீசன் துவக்கம் முதலே, நெய்யபிஷேக டிக்கெட்டுகள், தனலட்சுமி வங்கி கிளைகளில் கிடைத்தது. எனினும் அப்பம், அரவணை டிக்கெட்டுகள் வங்கிகளுக்கு வந்து சேரவில்லை. தற்போது இந்த டிக்கெட்டுகள் அனைத்து தனலட்சுமி வங்கி கிளைகளிலும் வந்து விட்டன. 1 டின் அரவணை, 60 ரூபாய். 1 பாக்கெட் அப்பம், 25 ரூபாய்.பக்தர்கள் வங்கி கிளைகளில் இருந்து டிக்கெட் வாங்கி வந்து விட்டால், சன்னிதானத்தின் முன்புறம் இதற்காக சிறப்பு கவுன்டர் செயல்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் பிரசாதம் பெற்று செல்ல முடியும். இந்த ஆண்டு சீசன் துவங்கிய பின்னர், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிகமாக, அப்பம், அரவணை விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.