Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தூரில் சண்டிஹோம பூஜை அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய நடைப்பந்தல் ரூ.2.5 கோடியில் விரிவாக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
11:12

சபரிமலை: "சபரிமலையில் 18ம் படிக்கு முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல், இரண்டரை கோடி ரூபாய் செலவில் நவீன படுத்தப்படுகிறது. அடுத்த சீசனுக்குள் இதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலை சன்னிதானத்தின் முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல் சுமார் 50 ஆண்டு பழமையானது. இரும்பு பாலங்கள் மற்றும் சிமென்ட் ஷீட்டுகளால் கட்டப்பட்டுள்ளது. தற்போது, இதை நவீனப்படுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி இது இரண்டு மாடி கட்டடமாக மாறுகிறது. 2வது மாடிக்கு சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் நேரடியாக வருவதற்கு பாலம் கட்டப்படும். முதலில், இரண்டாவது மாடிக்கு வரும் பக்தர்கள், பின்னர் முதல் மாடி வழியாக, கீழ்தளத்துக்கு வந்து கோயிலுக்கு செல்வர். இந்த புதிய கட்டடத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த சீசனுக்கள் நிறைவேற்றப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சபரிமலை மற்றும் பம்பையில் அன்னதானம் 24 மணி நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. பம்பையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக ஒரு அன்னதான மையம் தனியாக செயல்படுகிறது. சன்னிதானத்தில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 3 கட்டடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தேவசம்போர்டின் மீதமுள்ள 11 கட்டடங்களும் அடுத்த சீசனுக்கு முன் புதுப்பிக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பத்து முதல் 30 சதவீதம் பேர் கூடுதலாக வந்துள்ளனர். இதற்கேற்ப வருமானமும் அதிகரித்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar