திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாத சுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு அன்று மாலை பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேகம் நடந்தது. பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் மேளதாளத்துடன் சுவாமி சன்னதி வெளி பிரகாரத்தில் பக்தர்கள் புடை‹ழ சின்ன சப்பரத்தில் மூன்று முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.