Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கண்களை கவரும் நட்சத்திரங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால சிலை ஆஸ்திரேலியா கடத்தல்: விருத்தாசலத்தில் விசாரணை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
10:12

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலிருந்து ஆஸ்திரேலியா கடத்திச் சென்ற சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலை குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., அசோக் நடராஜன் விசாரணை நடத்தினார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் கண்டராதித்த சோழன், ராஜராஜசோழன் ஆகியோரால் அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து கொடி மரங்கள் அமைக்கப்பட்டன. அதில், ராஜராஜசோழன் காலத்தில் முதல் பிரகார சுவரை ஒட்டியவாறு அர்த்தநாரீஸ்வரர் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையின் கை ஒன்று, 2002ம் ஆண்டு சேதமானதால் அதனை எடுத்துவிட்டு, அங்கு வேறு சிலை வைக்கப்பட்டது. அகற்றிய சிலையை, கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பின்றி போட்டு வைத்தனர். புது சிலை வைத்ததைத் தொடர்ந்து பழைய சிலையை யாரும் கண்டு கொள்ளாததால் அதனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், சிலை கடத்திய வழக்கில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் கொடுத்த வாக்குமூலத்தில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை கடத்தப்பட்டது தெரிந்தது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் கடந்த ஜூலை மாதம் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை வழக்குப் பதிவு செய்தார். இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அசோக் நடராஜன், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்து, புதிய அர்த்தநாரீஸ்வரர் சிலை வைத்துள்ள இடத்தை பார்வையிட்டார். செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், கோவில் நிர்வாகிகளிடம் விசாணை செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar