பதிவு செய்த நாள்
12
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலையில் ஒரு நாள் 19 மணி நேரம் நடை திறந்திருக்கிறது. 5 மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜைக்காக, நடை திறந்த பின், தொடர்ச்சியாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால், 40 சதவீதம் வரை தேவசம்போர்டுக்கு வருமானம் அதிகமாகியுள்ளது. பொதுவாக, சீசன் காலத்தில் காலையிலும், மாலையிலும் 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். சீசன் அல்லாத காலங்களில் காலையிலும், மாலையிலும் 5:00 மணிக்கு திறக்கப்படும். அது போல சீசனில் பகல் ஒரு மணிக்கும், இரவு 11:00 மணிக்கும், நடை அடைக்கப்படும். ஆனால், இந்த சீசனில் கூட்டம் மிக அதிகமாக உள்ளதால், தரிசன கியூ நீண்டு போகாமல் தடுக்க, நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3:00 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் அடைக்கும் போது, ஒன்றே முக்கால் மணி வரை ஆகிறது. அதுபோல மாலை 3:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு அரிவராசனம் பாடி, அடைக்கும் போது 11:45 வரை ஆகி விடுகிறது. இதனால், ஒரு நாள் 19 மணி நேரம் வரை நடை திறந்திருக்கிறது.