Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் இடைத்தரகர்களுக்கு ...  சபரிமலை செல்ல சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் சபரிமலை செல்ல சொந்த வாகனங்களை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க சரங்குத்தி வரை நீண்ட வரிசை!
எழுத்தின் அளவு:
 சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க சரங்குத்தி வரை நீண்ட வரிசை!

பதிவு செய்த நாள்

18 நவ
2025
12:11

சபரிமலை: சபரிமலையில் நேற்று அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க காத்திருந்த பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது.


கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதன் தொடக்கமாக நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் முன்புறமுள்ள மணியை ஒலிக்க செய்த பின்னர், ஐயப்பன் சன்னதியின் தங்க கதவுகளை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. அப்போது தரிசனத்திற்காக காத்து நின்ற பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். சன்னதி முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12:00 மணிக்கு களபாபிஷேகம், 12:30 க்கு உச்ச பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது.


மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இது போன்ற பூஜை வரும் 40 நாட்களும் நடைபெறும்.


கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.இன்றும் பெரிய நடை பந்தலில் பக்தர்கள் நிரம்பியதால் வரிசை சரங்குத்தி வரை நீண்டது. காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: ‘‘சபரிமலையில் ஸ்பான்சர் என்ற பெயரில் இடைத்தரகர்களை அனுமதிக்க முடியாது,’’ என, திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் பிறந்ததும், மாலை அணிந்து சபரிமலை சென்று வருவது அதிகரிக்கும். அதற்காக, வாகனங்களை ... மேலும்
 
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் ஆய்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar