பதிவு செய்த நாள்
13
டிச
2013
02:12
*மக்களிடம் காணப்படும் ஏற்றத்தாழ்வு நீங்க ஒரே வழி அன்பு மட்டுமே. அன்பில்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை.
*இன்பத்தை தேடி எங்கும் அலையவேண்டாம். அன்பு உண்டானால் இன்பம் உண்டு.
*அன்பு கொள்கையில் இருந்தால் மட்டும் போதாது. செய்கையில் வெளிப்பட வேண்டும். உன்னிடம் கோடி ரூபாய் இருந்தாலும், தேச நன்மைக்காக கொடுத்துவிட்டு ஏழையாகி விடத் துணிவாயானால், நீ அன்புடையவனாகக் கருதப் படுவாய்.
*நேரத்தை வீணாகக் கழிப்பது கூடாது. பயனுள்ள செயல்களில் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஈடுபட வேண்டும்.
*கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில்விழுவதைப் போல, மனித சமூகம் நன்மையை நன்றாக உணர்ந்தும்கூட, தீமையை உதற வலிமையின்றி தத்தளிக்கிறது.
*பொய்மை, நயவஞ்சனை, நடிப்பு, ஏமாற்றுதல் போன்ற இழிபண்புகளால் பொருள்ஈட்டுவது நாய்ப்பிழைப்பு.
*எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்தமனதுடன் இருக்க முயலுங்கள். இடைவிடாமல் தொழிலில் ஈடுபட்டு பெருமையுடன் வாழுங்கள். ஒருவேளை இவற்றையெல்லாம் செய்தும், நன்மையேதும் கிடைக்கவில்லையென்றாலும், விதிவசம் என்று மகிழ்ச்சியோடிருங்கள்.
*கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்து செலுத்துங்கள்.
*தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
*கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வத்தின் அருளைப் பெற முடியும்.
*துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவன் எவனோ, அவனே கடவுள்.
*எதுவரை மனிதன் அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயத்தை விட்டு விட்டால் கிருதயுகம்(சத்தியயுகம்) அந்த கணமே கைமேல் வந்து விடும்.
*அமைதி, தைரியம், சக்தி, ஆற்றல், அருள், பக்தி சிரத்தை, பலம், தேஜஸ் போன்ற நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்.
*மனிதனுக்குப் பகைவர்கள் வெளியுலகில் இல்லை. அவனுக்கு உள்ளேயே தான் இருக்கிறார்கள். பயம், கோபம், சந்தேகம், பொறாமை போன்ற தீய பண்புகளே அந்த எதிரிகள்.
*நம்பிக்கை இருந்தால் ஆகாய கங்கை கூட பூமிக்கு வந்துவிடும். எவ்வளவு பெரிய ஆபத்து வாழ்வில் குறுக்கிட்டாலும், நம்பிக்கை இருந்தால் வெற்றி வந்து சேரும்.
*நம்பிக்கையின் முதல் லட்சணமே விடாமுயற்சி தான். முயற்சி இருப்பவனுக்கு துன்பம் கூட பயமுறுத்தாது. உள்ளத்தில் சோர்வு உண்டாகாது.
*நல்லவிஷயத்தை எடுத்து சொல்வது எளிதானது. ஆனால், சொன்னபடி நடந்து காட்டுவது அரிதானதானது.
*ஒரு செயலில் ஈடுபட்டு முயற்சி செய்யும்போது, நம்மை பிறர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் உதவிகள் தானாகவே வரும்.
-தேசியகவி