பதிவு செய்த நாள்
17
டிச
2013
10:12
திருவண்ணாமலை: மார்கழி மாதபிறப்பையொட்டி, திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள், நேற்று கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மார்கழி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை, 12.30 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், மார்கழி மாத பிறப்பு என்பதால், நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் குவிந்தனர். பவுர்ணமி மற்றும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவமூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர். பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மதியம், 2.17மணியுடன் முடிவடைகிறது. எனவே, நேற்று இரவு, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில், 16ம் தேதியும் (நேற்று), 17ஆம் தேதியும் சிறப்பு தரிசனம் மற்றும் அமர்வு தரிசனம ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.