Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலை கிரிவலம்: 1500 ஆண்டுகளுக்கு ... மார்கழி மாத பிறப்பு: தி.மலையில் பக்தர்கள் கிரிவலம்! மார்கழி மாத பிறப்பு: தி.மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக நடமாடும் மருத்துவ மையங்கள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2013
10:12

சபரிமலை: சபரிமலை செல்லும் வழியில், பக்தர்களுக்காக மருத்து வசதி துவங்கப்பட்டுள்ளது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், சபரிமலையில் கூறியதாவது: இந்த சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மாநில அரசும், தேவசம்போர்டும் இணைந்து, பக்தர்களுக்கு வசதிகளை செய்துள்ளோம். பம்பையில், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் வழிகளில், போதிய மருத்துவ வசதி இல்லை என்ற புகார் எழுந்தது. அதை தீர்க்கும் வகையில், சரல்மேடு என்ற இடத்தில், அனைத்து வகையான பரிசோதனை வசதிகளுடன், மருத்துவ மையம் நிறுவப்பட்டுள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான ஆபத்தான ஏற்றங்களில், பக்தர்களுக்கு உதவும் வகையில், நடமாடும் மருத்துவ மையங்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள், சூஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ரோந்து வருவர். மலையேறும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், பக்தர்களுக்கு அந்த இடத்திலேயே மருத்துவ உதவி செய்யப்படும். வரும், 19ம் தேதி சபரிமலை உயர்மட்ட கமிட்டி கூட்டம், திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில், அடுத்த ஆண்டு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் பற்றியும், மாஸ்டர் பிளானை செயல்படுத்துவது பற்றியும், விவாதித்து முடிவு எடுக்கப்படும். சன்னிதானத்தில், 25 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு, முதல்வர் உம்மன்சாண்டி, ஜனவரி முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டுகிறார். கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையால், சபரிமலைக்கு எந்த பாதிப்பும் வராது. பம்பைக்கு அதிக வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும் என்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம் பற்றி, ஆராய்ந்து பதிலளிக்கப்படும். ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன், சபரிமலைக்கு மத்திய அரசு நிலம் வழங்கியுள்ளதால் எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar