திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்ர மணியருக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராஜா குருக்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.