மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் போது, காலால் உதைத்து கலைத்தல் வேண்டாம் என்று சிறுவனிடம் வேண்டிக் கொள்வது சிற்றில் சிதைத்தல் ஆகும். பெற்றோர் பிள்ளையிடம் சிறுபறை என்னும் இசைக்கருவியைக் கொட்டி விளையாடும்படி கூறும் பருவம் சிறுபறை முழக்கல் ஆகும். மரத்தால் செய்யப்பட்ட சிறுதேரினை உருட்டி விளையாடச் சொல்லி மகிழ்வது சிறுதேர் உருட்டல் ஆகும்.