திருத்தணி: முருகன் கோயில் திருப்படித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைந்த குழுக் கூட்டம் ஆர்.டி.ஓ. டாக்டர் கலைவாணி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயிலில் டிசம்பர் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1 புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.