பூஜை செய்யும் போது தெய்வங்களுக்குரிய மந்திரம், ஸ்லோகம் சொல்வது வழக்கம். பூஜையின்போது வெறும் தரையில் அமர்ந்து மந்திரம் ஜெபிப்பது கூடாது. ஒரு விரிப்பின் மீது அமர்ந்து பூஜிப்பது மிகவும் அவசியம். வெள்ளை நிற கம்பளி மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தால் விரும்பிய வரம் விரைவில் கிடைக்கும். வேட்டியை மடித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து மந்திரம் ஜெபிக்க குறைவில்லா செல்வம் கிடைக்கும். தர்ப்பையைப் பரப்பி அமர்ந்து பூஜிக்க மனபலம் அதிகரிக்கும்.