விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், முப்பிள்ளையாருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்திநகர் நர்த்தன விநாயகர், தெற்குதெரு யாகசாலை விநாயகர், அய்யனார் கோவில்தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு செல்வ விநாயகர், கடலுார் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் சித்தி விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.