Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ! உச்சிப்பொட்டும் மெட்டியும் எதற்காக?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
டிச 30 ரமணர் பிறந்தநாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
02:12

*உன்னை நீ நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஏனெனில், நீயே உன்னை மற்றவர்களின் வடிவங்களில் பார்க்கிறாய்.
*நான் யார் என்ற கேள்விக்கான விடையை ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டால், உண்மையிலேயே நீ யார் என்ற உண்மையை உணர முடியும். அதுவே ஞானத்திற்கான வழி.
*பிறப்பு, இறப்பு இரண்டுமே உண்மை கிடையாது. எல்லாம் மனதின் கற்பனையே. ஞானம் அடைந்த பிறகு இந்த உண்மையை அறிய முடியும்.
*தன்னைத் தான் அறிந்து கொள்வதே வாழ்க்கை. நீ எவ்விதம் வாழ்க்கையைப் பார்க்கிறாயோ அதைப் பொறுத்தே வாழ்க்கையும் அமையும்.
*துன்பத்தின் இருப்பிடமாக மனம் இருக்கிறது. அது தான் உண்மையான குற்றவாளி.
*நிழல்படம் காண்பிக்கப்படும் திரையில், காட்சிகள் மாறிக் கொண்டே இருப்பது போல, மனதில் எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிகள் மறைந்தாலும், உணர்வுகள் மறைவதில்லை.
*எண்ணத்திற்கு ஏற்ப மனமே எல்லாவற்றையும் உண்டாக்குகிறது. ஒரு பெண், பெண்ணாகத் தான் இருக்கிறாள். ஒரு மனம் அவளை அம்மாவாகவும், மற்றொரு மனம் மனைவியாகவும் பார்க்கிறது.
*ஒருவனுக்கு அமைதியையும், மற்றொருவனுக்கு துன்பத்தையும் தருவதற்கு, கடவுள் ஒன்றும் ஓரவஞ்சனைக்காரர் அல்ல. அவர் தந்துள்ள நல்லவற்றைப் பார்க்க மனிதன் தான் மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் அவன் தேடுவதில்லை.
*கடவுளை முழுமையாக சரணடைந்து விடு! எல்லா பற்றுகளையும் விட்டு விட முடியும். எல்லா ஆசைகளும் போன பின், கடவுளை அடைய முயற்சி செய்யலாம் என்று காத்திருப்பதால் பயனில்லை. காலம் விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது.
*மனிதனின் தேவைக்கு ஏற்ப கடவுள் மனிதவடிவிலோ, மற்ற உருவத்திலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டி ஏற்றுக் கொள்கிறார்.
*மனிதன் தவறான செயல் களில் ஈடுபடுகிறான். பின்னர் நான் என்னும் அகந்தை உணர்வுடன் அதை மறைக்க முயற்சிக்கிறான்.
*தான் செய்யும் வழிபாட்டு முறையை மேலானதாகவும், மற்றவர்களின் வழிபாட்டு முறையைக் கீழானதாகவும் எண்ணுவது கூடாது.
*கடவுளை உணர்ந்து சுகமாக இருக்க வேண்டுமானால் சும்மா இருந்தால் போதும். ஆனால், சும்மா இருப்பதைப் போல சிரமமான காரியம் வேறு கிடையாது.
*உன்னைப் படைத்த சக்தியே இந்தஉலகத்தையும் படைத்தது. உன்னைக் காப்பாற்றும் மகாசக்தி இந்த உலகத்தையும் நிச்சயம் காப்பாற்றும்.
*மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்என்பதை அறிய முற்பட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.
-ரமணர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar