அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2014 04:01
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகாபிரத் தியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூசித்து வேண்டிய வரங்களை பெற்றனர். இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. இதில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்த õல் சத்ரு உபாதை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார் என்பது ஐதீகம். மார்கழி மாத அம்மாவாசை காலை ஸ்ரீமகாபிரத்தியங்கிராதேவி க்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 9மணிக்கு கோவில் மண் டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட் டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். ஆண்டின் தொடக்க நாளான நேற் று நடைபெற்ற யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவியை தரிசித்தனர். நிகும்பலா யாகத்தையொட்டி கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கு அர சு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.