Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பாதயாத்திரை பக்தர்களின் ... மறைமலை நகரில் மகா கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தன்பட்டி கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
12:01

உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தி, புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமந்தராயப் பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டிசம்பர் 30,31 ம் தேதிகளில் 2 நாள் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. 16 வகை இனிப்புகள் நைவேத்தியம் செய்து யாகசாலையில் சேர்க்கப்பட்டது. இரண்டுநாட்களும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனுமன் ஜெயந்தி அன்று புத்தாண்டு பிறந்ததையொட்டி, நேற்று அதிகாலை 5 மணி முதல் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. கோயில் வளாகத்திற்கு வெளியே உத்தமபாளையம்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை வரை நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்தப்பட்டது. பல வண்ண மலர்கள் அடங்கிய புஷ்பயாகத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர்களால் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பூந்தி, வடமாலை, தக்காளி சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தலைமை பூசாரி வெங்கட்ராமன் யாகசாலை பூஜைகள், புத்தாண்டு சிறப்பு பூஜைகளையும் செய்தார்.

*அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பெரியகுளம் பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில், வெண்ணை காப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் உட்பட சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. யாகசாலை பூஜைகள் நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் உட்பட 9 வகை அபிஷேகப்பொருட்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. அனுமனுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் படையல் செய்தும், வடைமாலை, துளசி மாலை சாத்தியும் சிறப்பு ஆராதனை செய்தனர்.

*சக்கம்பட்டி மெயின்ரோட்டில் அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்தனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar